Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( அறுவதா )


14. அறுவதா

(தாவரவியல் பெயர் : Ruta graveolens)

மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை எனவும் வழங்கப் பெறும். இதன் இலையே மருத்துவப் பயனுள்ளதாகும். வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல் மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களை உடையது.

1. இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

2. இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர, சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

3. இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப 1/4 முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் சாப்பிட வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச் சளி, பால் மாந்தம், வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

4. உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாக சுவாசிக்க இருமல் தணியும்.

No comments:

Post a Comment