Wednesday, September 28, 2011

தினம் ஒரு மூலிகை ( இண்டு )


23. இண்டு
(தாவரவியல் பெயர் : Acacia pennata)

பீனிசத்தைப் போக்கும் பெருகியதோர் நீரேற்ற
தானசிக்கச் செய்யும் இது சத்தியங்காண்_ வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்.

சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூரியமுட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கோடி. இலை, தண்டு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கோழையகற்றுதல், நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.

1. இண்டந்தண்டை சிறு துண்டாக நறுக்கி ஒரு புறம வாயினால் ஊத மறுபுறம் சாறு வரும். அந்த சாறு 15 மி.லி. யில் திப்பிளிப் பொடி, பொரித்த வெங்காரம் வகைக்கு ஒரு கிராம் சேர்த்துக் காலை மட்டும் 3 நாட்கள் கொடுத்தால் ஈளை, இருமல் குணமாகும்.

2. மேற்சொன்ன மருந்தை 1 தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, மாந்தம் தீரும்.

3. இண்டங்கொடிச் சமூலம், தூதுவளை, கண்டங்கத்தரி வகைக்கு ஒரு பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வர இரைப் பிருமல் தீரும். குழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.

4. இண்டம் வேர், தூதுவளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

5. இண்டம் இலை, சங்கிலி, தூதுவளை இலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.








No comments:

Post a Comment