Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( அவரை )

12. அவரை

(தாவரவியல் பெயர் : Lablab purpurus)

உணவுக்காகப் பயிரிடப்படும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை குடல் வாயு அகற்றும். பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு, எரிச்சல் ஆகியவை தீரும்.

2. இலைச் சாற்றுடன் மஞ்சள் பொடி கலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ பூசி வர ஆறும்.

3. இலைச் சாற்றை சிறு துண்டுத் துணியில் நனைத்து நெற்றியில் போட்டு வர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்து உண்பது திரிதொடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.

No comments:

Post a Comment