Monday, September 5, 2011

தினம் ஒரு மூலிகை ( அத்தி )


6. அத்தி

(தாவரவியல் பெயர்: Ficus racemosa)

காரமோ உட்டினமாம் காதுகின்ற பித்தத்தை
நீரிழிவைத் தலை நீழ இரத்தம் சேரும்
கிரிசாரத்தைப் போக்கும் கிளர் கோளி எனும்
மரச்சரும் பாலதனை வாங்கு."

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய மர வகை. கொத்தாகக் காய்க்கும். இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு, இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் இரத்தம் கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

2. அத்திப் பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

3. முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப் பனை, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சம அளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாட்கள் கொடுக்க தாது வளர்ச்சி அதிகமாகும்.

4. அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமஅளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை சாப்பிட பெரும்பாடு, சீதபேதி, இரத்த பேதி, ஆகியவை தீரும்.

5. அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சம அளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப் போக்கு தீரும்.

6. அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடித்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் சாப்பிட இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

7. அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.

மன்னர்கள் காலத்தில் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு அத்திப்பாலை மருந்தாகப் பயன்படுத்தினர்.


No comments:

Post a Comment