Thursday, September 22, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆகாச கருடன் )


21. ஆகாச கருடன்

(தாவரவியல் பெயர் : Corallocarpus epigaeus)

அரையாப்பு வெள்ளையகலாக் கொறுக்கை
கரையாத கட்டி இவை காணார் வரையில்
திருடரெனச் செல்லும் விடம்சேர் பாம்பும் அஞ்சும்
கருடன் கிழங்கதனைக் கண்டு.

கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்கு உடைய ஏறு கொடி. கசப்புச் சுவையுள்ள கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும், உடல் பலம் அதிகரிக்கவும் மருந்தாகும்.

1. சுண்டைக்காயளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் கடி விஷமும், அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.

2. கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாக அரைத்து 50 மி.லி. தண்ணீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்ப்பூச்சாகவும் பூசி வர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.

3. கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு, உப்பு, புளி நீக்கி சாப்பிட பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

4. 5 கிராம் கிழங்குப் பொடிய 100 மி.லி தண்ணீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட சீத பேதி தீரும்.

5. 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கீழ வாதத்துக்கு பத்துப்போட குணமாகும்.

No comments:

Post a Comment