Wednesday, November 23, 2011

39. தினம் ஒரு மூலிகை ஓமவல்லி.

(தாவரவியல் பெயர் : Coleus aromaticus Benth)

"காச இருமல் கதித்தம சூரியயையம்

பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் - வீசுசுரங்

கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்

கற்பூர வள்ளிதனைக் கண்டு."

சதைப் பற்றுள்ள, மணமுள்ள எதிரடுக்கில் அமைந்த இலகளையுடைய குறுஞ்செடியினம். இலையே மருத்துவப் பயனுடையது.

வியர்வைப் பெருக்கியாகவும், கோழை அகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் செயல்படும்.

1. இலைச்சாற்றைச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சீதள இருமல் தீரும்.

2. இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

3. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும்.



No comments:

Post a Comment