Friday, November 4, 2011

37. தினம் ஒரு மூலிகை (ஏலம்)

( தாவரவியல் பெயர் : Elettaria cardamomum Maton )

தொண்டை வாய் கவுள் தாலு குதங்களில்
தோன்றும் நோய் அதிசாரம் பன் மேகத்தால்
உண்டைபோல் எழும் கட்டி கிரிச்சரம்
உழலை வாந்தி சிலந்தி விஷசுரம்
பண்டை வெக்கை விதாக நோய் காசமும்
பாழும் சோமப்பிணி விந்து நட்டம் உள்
அண்டை ஈளை வன்பித்தம் இவைகலாம்
லமாம் கமழ் ஏலமருந்தே.


மலைப்பாங்கான இடங்களில் விளையும் ஒரு மணப் பொருள். உலர்ந்த காய்கள் நாட்டு மருந்துக் கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பசித்தூண்டியாகவும், வயிற்று வாயுவகற்றியாகவும் உடல் வெப்பம் மிகுப்பானகவும் செயல்படும்.

1. ஐந்து ஏலக்காயை நசுக்கி 200 மி.லி. பாலில் போட்டு, 200மி.லி. தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை கலந்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிடப் பித்த மயக்கம் தீரும்.

2. ஏலரிசி, சீரகம், சுக்கு, கிராம்பு சமஅளவு எடுத்துப் பொடியாக்கி இரண்டு கிராம் வீதம் தேனில், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை ஆகியவை குணமாகும்.

3. ஏலக்காயை உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டை, வாய், கீழ்வாய், இவைகளில் உண்டாகும் நோய்களையும் இருமல், கழிச்சல், நீர்ச்சுருக்கு, நெஞ்சின் கோழைக் கட்டு, சிலந்தி நஞ்சு இவற்றைப் போக்கும். பித்தத்தை ஆற்றும். பசித்தீயை உண்டாக்கும். விந்துவைப் பெருக்கும்.





No comments:

Post a Comment