Thursday, November 3, 2011

36. தினம் ஒரு மூலிகை. எள்


36. எள்
( தாவரவியல் பெயர் : Sesamum orientale )

மெல்லியதாக உடைந்த இலைகளையும், வெண்மையான தனித்த மலர்களையும், நான்கு பட்டையான காய்களையும், பழுப்பு நிற அல்லது சிறிய எண்ணெய்ச் சத்துள்ள விதைகளையும் உடைய சிறு செடியினம்.

இலைகள் எரிச்சல் தணிக்கும். விதை சிறு நீர் பெருக்கும். மாதவிலக்குத் தூண்டும், மலமிளக்கும், தாய்ப்பால் அதிகரிக்கும், உடலுரமாக்கும்.

1. இலையை அரைத்துக் கட்டிகளுக்குப் பற்றிட விரைவில் ஆறும்.

2. இலைக் கொத்தை நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாகத் தடித்து காணப்படும். இதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு ஆகியவை தீரும். பெரியவர்களுக்கு நீர்க்கோவை, சிறுநீர்ப்பை அழற்சி, சொட்டு நீர் ( சொட்டு சொட்டாக சிறுநீர் போதல் ) ஆகியவை தீரும்.

3. 5 கிராம் எள் பொடியை வெண்ணையுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.

4. எள்ளை அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் கட்டிகளின் மீது பூசி வர பழுத்து உடையும்.

5. ஒரு கிராம் எள் பொடியை நாள்தோறும் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வர மாதவிலக்குப் பிரச்சினைகள் நீங்கும்.


No comments:

Post a Comment