Sunday, August 28, 2011

தினம் ஒரு மூலிகை ( அகத்தி )

2. அகத்தி

(தாவரவியல் பெயர்

: Sesbania grandiflora)

"வருந்த சகத்திலெழு பித்தமதி சாந்தியாம்

மருந்திடுதல் போம் வன்கிரந்தி வாய்

வெந்திருந்த சனம் செரிக்கும்

நாளும் அகத்தி இலை திண்ணுபவர்க்கு

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென் மரவகை. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமையலுக்கும், இல்லை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. கீரையை வாரம் ஒருமுறை வெயிலால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ பருகுவதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்துவர சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. அகத்தித் தைலம் வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


No comments:

Post a Comment