Sunday, August 28, 2011

தினம் ஒரு மூலிகை ( அக்கரகாரம் )


3. அக்கரகாரம்

(தாவரவியல் பெயர்: Anacyclus pyrethrum)

அக்கரகாரம் அதன் பேர் உரைத்தக்கால்
உக்கிராக அத்தோடம் ஓடுங்கான் ஐ முக்கியமாய்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே தாகசுரம்
கண்டகல் பயந்தோடுங்காண்.

மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம்.இதன் வேர் மருத்துவப் பயனுடையது. தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல்தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

1. ஒருதுண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, தொண்டைக்கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250மி. லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வர பல்வலி நீங்கி பல்லாட்டம் குறையும். வாய் மற்றும் தொண்டைப் புண்கள் ஆறும்.

No comments:

Post a Comment