Sunday, October 2, 2011

25. தினம் ஒரு மூலிகை - இலந்தை

25. இலந்தை
(தாவரவியல் பெயர் : Ziziphus mauritiana lamk )

" பித்தம் மயக்கம் ருசி பேராப் பெரும் வாந்தி
மொத்த நிலம் எல்லாம் முடிந்திடுங்காண் மெத்த
உலர்ந்த வெறும் வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை நறுங்கனியை எண்.

வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறுமரம். புளிப்புச் சுவையுடைய உண்ணக கூடிய பழங்களை உடையது. இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசி தூண்டியாகவும், பழம் சளியகற்றி, மலமிளக்கி, பசித் தீயை அதிகப் படுத்தவும் பயன்படுகிறது.

1. இலை ஒரு பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 எல்லாம் சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் கோளாறுகள் நீங்கிக் குழந்தைப் பேறு கிட்டும்.

2. இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம்பட்டை 40 கிராம் எடுத்து நன்கு இடித்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 125மி.லி.யாக்கி தினமும் நான்கு வேளை குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு தீரும்.

3. இலந்தை வேர்ப்பட்டைச் சூரணம் நான்கு சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

4. துளிர் இலை அல்லது பட்டையை 5 கிராம் அளவு எடுத்து நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலை கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்த பேதி தீரும்.





No comments:

Post a Comment