Saturday, October 22, 2011

34. தினம் ஒரு மூலிகை எலுமிச்சை

34. எலுமிச்சை
(தாவரவியல் பெயர் : Citrus Medica )

தாகங் குகைநோய் தாழா சிலிபதநோய்
வேகம் கொள் உன்மாதம் வீறுபித்தம் _மா கண்ணோய்
கன்னநோய் வாந்திபோம் கட்டுவாதித் தொழிலில்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து,”


முள்ளுள்ள சிறு மரம். இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

உடல் சூடு தணிக்கவும், பசித் தூண்டியாகவும் பயன்படும்.

1. இலையை மோரில் ஊறவைத்து, மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு, வெட்டிச் சூடு தணியும்.

2. பழச்சாறு நான்கு துளிகள் காதில் விட்டுவர காது வலி நீங்கும்.

3. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

4. பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்துப் பின் காய வைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்தமயக்கம், குமட்டல், பித்தவாந்தி, சுவையின்மை, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

5. நகச் சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.


No comments:

Post a Comment